முதலீட்டு ஆலோசனை
நீண்டகால முதலீட்டுக்கான ஃபண்டுகளைத் தேர்வு செய்வதற்கு முன் உங்கள் இலக்குகளை முடிவு செய்யுங்கள்.
எனக்கு வயது 60. பின்வரும் மியூச்சுவல் ஃபண்டுகளில் நான் முதலீடு செய்துள்ளேன். ஹெச்.டி.எஃப்.சி பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் ரூ.4 லட்சம், ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. ஈக்விட்டி அண்ட் டெப்ட் ஃபண்ட் ரூ.1.5 லட்சம், ஐ.சி.ஐ.சி.ஐ மல்ட்டி அஸெட் ஃபண்ட் ரூ. 2.5 லட்சம், யூ.டி.ஐ ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்ட் ரூ.3 லட்சம், யூ.டி.ஐ ரெகுலர் சேவிங்ஸ் ஃபண்ட் ரூ.4.5 லட்சம், யூ.டி.ஐ ஃப்ளோட்டர் ஃபண்ட் ரூ.1.5 லட்சம், ஹெச்.டி.எஃப்.சி அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்ட் ரூ.2 லட்சம், ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. ஃப்ளோட்டிங் இன்டரஸ்ட் ஃபண்ட் ரூ.2 லட்சம்.
இந்த ஃபண்டுகள் மூலம் கிடைக்கும் மாதாந்தர டிவிடெண்டுகளைவைத்து, மாதாந்தரச் செலவுகளைச் செய்து வருகிறேன். தற்போது ஐ.சி.ஐ.சி.ஐ ஈக்விட்டி அண்ட் டெப்ட் ஃபண்டில் டிவிடெண்ட் தரப்படவில்ைல. இத்தகைய சூழலில், என் மாதாந்தர வருமானம் அதிகரிக்க எனது ேபார்ட்ஃபோலியோவில் என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும்?
– சண்முகம். மெயில் மூலமாக
“முதலீட்டாளர்கள் டிவிடெண்ட் ஆப்ஷனைத் தேர்வு செய்யும் முன் ஒரு விஷயத்தைக் கட்டாயம் மனதில்கொள்ள வேண்டும். அது, மாதந்தோறும் வருமானம் தேவை என்பதற்காகவோ, அவ்வப்போது ஒரு தொகை கிடைக்க வேண்டும் என்பதற்காகவோ முதலீட்டாளர்கள் டிவிடெண்ட் ஆப்ஷனைத் தேர்வு செய்யக் கூடாது. டிவிடெண்ட் என்பது நம் முதலீட்டில் ஏற்பட்டிருக்கும் லாபத்தில் ஒரு பகுதியை விற்று, அதிலிருந்து தரப்படுவதுதான் என்ற அடிப்படையை முதலீட்டாளர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
மார்க்கெட் நிலவரம் சரியில்லை என்றாலும் இருப்பதிலேயே எது லாபத்தில் உள்ளதோ, அதை விற்று டிவிடெண்ட் தரப்படுகிறது. மாத வருமானம் அவசியம் தேவை என்பவர்கள் டிவிடெண்ட் ஆப்ஷனைத் தேர்வு செய்வதற்கு பதிலாக, சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான் (SWP) முறையைக் கையாள்வது சிறந்தது. இதன் மூலம் நமக்கு எவ்வளவு பணம் தேவையோ அந்த அளவுக்கு அதிலிருந்து எடுக்க முடியும். இந்த முக்கியமான விஷயத்தை மனதில் கொண்டு உங்களுக்கான பரிந்துரையைத் தருகிறேன்.
ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. ஈக்விட்டி அண்ட் டெப்ட் ஃபண்ட் கடந்த மூன்று ஆண்டுகளில் சமீபத்திய நான்கு மாதங்கள் மட்டும் டிவிடெண்ட் கொடுக்கவில்லை. ஏனென்றால், மார்க்கெட் ஏற்றம் இறக்கம் அதிகமாக உள்ளது. உங்களிடமிருக்கும் ஹெச்.டி.எஃப்.சி பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டை விற்றுவிட்டு, அதற்கு பதிலாக எடெல்வைஸ் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டில் முதலீடு செய்யவும்.”
நான் கடந்த 22 மாதங்களாக சில ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் மாதந்தோறும் முதலீடு செய்துவருகிறேன். நான் செய்துள்ள முதலீடுகள் சரியானவையா?
நான் முதலீடு செய்துள்ள ஃபண்டுகள்… ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.4,000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. புளூசிப் ஃபண்ட் ரூ.4,000, கோட்டக் ஸ்டாண்டர்டு மல்ட்டிகேப் ஃபண்ட் ரூ.4,000, எல் அண்ட் டி மிட்கேப் ஃபண்ட் ரூ.4,000, நிப்பான் இந்தியா ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.5,000, டாடா ஈக்விட்டி பி.இ ஃபண்ட் ரூ.4,000.
-ஆர்.கமலகண்ணன், மெயில் மூலமாக
“உங்களுடைய ரிஸ்க் அளவு என்ன என அளவிட முடியவில்லை. இருப்பினும், இரண்டு ஸ்மால்கேப் ஃபண்டுகளுக்கு பதிலாக ஒரு ஸ்மால்கேப் ஃபண்ட் மட்டும் வைத்துக் கொள்ளவும். இரண்டு மிட்கேப் ஃபண்டுகள் வைத்துக்கொள்ளவும். அது ஓரளவுக்கு உங்கள் போர்ட் ஃபோலியோவின் ரிஸ்க்கைக் குறைக்கும். ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்டை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்டில் முதலீடு செய்யவும்.”
நான் மாதந்தோறும் தலா ரூ.2,000 வீதம் சில மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வருகிறேன். என் முதலீட்டில் ஏதாவது மாற்றங்கள் அவசியமா?
என்னுடைய முதலீடுகள்… ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட், ஆக்ஸிஸ் மிட்கேப் ஃப்ண்ட், எல் அண்ட் டி ஃபோகஸ்டு ஈக்விட்டி ஃபண்ட், எடெல்வைஸ் டெக்னாலஜி ஃபண்ட், மிரே அஸெட் ஹெல்த்கேர் ஃபண்ட்.
– பாலகுமார், திருச்செங்கோடு
“உங்களிடமிருக்கும் முதலீடு பரவலாகவும், அதேவேளையில் நல்ல ஃபண்டுகளாகவும் இருக்கிறது. உங்கள் முதலீட்டுத் தேர்வு சரியாக உள்ளதால், அப்படியே தொடரவும். நீங்கள் இரண்டு செக்டார் ஃபண்டுகளையும் தொடரும் அதே நேரத்தில், இவற்றின் மூலம் அதிக லாபம் கிடைக்கும்போது புராஃபிட் புக் செய்வது கட்டாயம். 25 சதவிகிதத்துக்குமேல் லாபம் இருக்கும்போது, 30-40% வரை புராஃபிட் புக் செய்வது நல்லது.”
என் வயது 26. நான் தற்போது ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்டில் ரூ.5,000 முதலீடு செய்துவருகிறேன். நான் 15 வருடங்கள் வரை முதலீட்டைத் தொடர திட்டமிட்டுள்ளேன். இது தவிர, வேறு எந்த ஃபண்டுகளில் புதிய முதலீட்டைத் தொடங்கலாம் என்று சொன்னால் உதவியாக இருக்கும். கூடுதலாக மாதம் ரூ.15,000 வரை முதலீடு செய்யவிருக்கிறேன். அடுத்த 15 வருடங்களில் பெரிய தொகையைச் சேர்க்க வேண்டும் என்பது என் இலக்கு. எதன் அடிப்படையில் நீண்டகால மியூச்சுவல் ஃபண்டுகளைத் தேர்வு செய்வது?
– ஏ.ராகுல், நாமக்கல்
“நீண்டகால முதலீட்டுக்கான ஃபண்டுகளைத் தேர்வு செய்வதற்கு முன் உங்கள் இலக்குகளை முடிவு செய்யுங்கள். ஏனென்றால், அது உங்களுடைய முதலீட்டின் வருமானத்தையும் மற்றும் ரிஸ்க்கையும் நிர்ணயம் செய்ய ஏதுவாக இருக்கும். இது முதலீட்டில் செய்ய வேண்டிய முதல் படி. இரண்டாவதாக, சரியான அஸெட் அலொகேஷன் செய்ய வேண்டும். அப்போதுதான் உங்களால் எவ்வளவு தொகையை ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிக்க முடியும். அத்துடன் உங்களுடைய ஈக்விட்டி முதலீடு லார்ஜ்கேப், மல்ட்டிகேப், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் என இருக்குமாறு முதலீடு செய்யவும். நீங்கள் அதிக ரிஸ்க் எடுப்பவராக இருந்தாலும், அத்துடன் போர்ட்ஃபோலியோவைப் பராமரித்து புராஃபிட் புக் செய்ய முடியும் என்றால் மட்டும் செக்டார் ஃபண்ட், இன்டர்நேஷனல் ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டும். உங்களுடைய ஃபண்டை நிர்வகிப்பவரின் அணுகுமுறையும், உங்களுடைய அணுகுமுறையும் சமமாக இருக்கிறதா என்று ஆராய்ந்து அந்த வகை ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும். உங்கள் ஃபண்டில் எவ்வளவு செலவு விகிதம் இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும். அதேபோல், ஃபண்டின் போர்ட்ஃபோலியோ டர்ன்ஓவர் எவ்வளவு என்றும் அந்த ஃபண்ட் குறிப்பிட்டுள்ள வரைமுறைகளைப் பின்பற்றுகிறதா என்றும் பார்க்க வேண்டும். முக்கியமாகக் கவனிக்க வேண்டிய அம்சங்களை மட்டும் இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்.’’
தொகுப்பு: கா.முத்துசூரியா
உங்கள் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை மாற்றியமைக்க வேண்டுமா? finplan@vikatan.com என்ற மெயில் முகவரிக்கு நீங்கள் முதலீடு செய்யும் ஃபண்டுகள் குறித்த விவரங்களை அனுப்பவும்.
THIS ARTICLE WAS PUBLISHED IN NANAYAM VIKATAN ON 09.08.2020 WRITTEN BY MR.SURESH PARTHASARATHY.